“நன்னன் குடி” அமைப்பின் சார்பில், ’செம்மல் நன்னன்’ நினைவாக நடத்தப்பட்ட, சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நூலான, “தன்மான வாழ்வே நலவாழ்வு” மற்றும் பார்வதி நன்னன் பற்றிய தொகுப்பு நூலான, “எனதருமை அம்மாச்சி” ஆகிய நூல்களை, வேண்மாள் நன்னன், அவ்வை நன்னன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 17,08,2026)

இலங்கை மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறீநாத் (DR.SRINATH) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். உடன், சென்னை ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தனசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செலன். (சென்னை, 17.8.2026)

ஆவடி மாவட்டம் சார்பில், இரண்டு விடுதலை அரை ஆண்டு சந்தா ரூ.2,000/-, மற்றும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.வெ.நடராஜன் சார்பில், விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500, அம்பத்தூர் பூ.இராமலிங்கம் சார்பில், கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.600/- என, நன்கொடைகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், அம்பத்தூர் சரவணன். (சென்னை, 15.08.2026)
