திருச்சி, ஆக.18- திருச்சி Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தை இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி மற்றும் திரிஷ்யா நாகராஜ் ஆகியோர் 12.08.2026 அன்று பார்வையிட்டனர். இதில் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் தயாரிப்பு முறைகளை மாணவர்கள் நேரடியாகப் பார்வையிட்டனர்.
மேலும் மருந்து உற்பத்தி முறைகள், அதன் தரத்தை உறுதி செய்தல், மற்றும் விற்பனை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மருந்து தயாரிப்புகள் குறித்து பாடத்திட்டத்தில் படிப்பதோடு நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு, இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கோபி மற்றும் சுப்ரமணியன் மற்றும் மருந்தியல் குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
