தஞ்சாவூர், ஆக. 17- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனாள் தொழிற் சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) பத்தாவது பொதுக்குழு கூட்டம் 16. 8.2026 அன்று தஞ்சாவூர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாளிகை, சரோஜ் நினைவகத்தின், என். எம். சுந்தரம் அரங்கில் நடந்தது.
பொதுக்குழு கூட்டத் துக்கு இவ்வமைப்பின் தலைவர் எஸ். பி. இராமன் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் டி.சிங்காரவேலு, துணைத்தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம். முருகையா, பொருளாளர் என். சுப்பிரமணியன், உதவிப் பொருளாளர் வீ. பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகை தந்த அனை வரையும் மதுரை பரவை எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சென்னை ரத்தினவேல் சுப்பிரமணி நன்றியுரை ஆற்றினார்.
நீண்ட விவாதங்களுக்கு பிறகு நாட்டின் நலன், வங்கி ஓய்வூதியர்களின் நலன் சார்ந்த கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு ஏழு பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்று 21000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவன மான எல்.அய்.சி. பாலிசிதாரர்களின் தொடர்ந்து நம்பிக்கையை பெற்று வருவதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளது வரலாற்று பேருண்மை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்று மெல்ல மெல்ல தனியார் மயமாக்கும் போக்கு நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து, எல்.அய்.சி. பங்குகளை விற்பனை செய்யும் (OFFER FOR SALE – OFS) முடிவை ஒன்றிய அரசு தாமதமின்றி கை விட வேண்டுமென AFCCOM வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையா ளர்களிடம் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்காக தண்டனையாக பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய் 26100 கோடியை திரும்ப அளிப்பதோடு, இத்தகைய தவறான நடைமுறையை தாமதமின்றி கைவிட பொதுத்துறை வங்கிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும்.
வங்கி ஓய்வூதியர்க ளுக்கு பஞ்சப்படி உயர்வை மூன்று மாதங் களுக்கு ஒரு முறை வழங்கும் நடைமுறையை தாமதமின்றி நடைமுறைப் படுத்த பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்
பென்சன் மறுபரி சீலனை செய்யாமல் (PENSION UPDATION) கடந்த முப்பது ஆண்டுகளாக பாதிப்படைந்து வருகிற எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு தாமதமின்றி நீதி வழங்க பொதுத்துறை வங்கிகள் நிர்வாகம் முன் வரவேண்டும்
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல இலவச பேருந்து பயண வசதி அளிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்
பங்கேற்றோர்
இக்கூட்டத்தில் எஸ்.கருணாகரன், பொதுக் குழுவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.சந்திரா கில்பர்ட், என்.பாண்டுரங்கன், புதுச்சேரி கோவை எம்.ரகுநாதன், வேலூர் ஆர்.லோகநாதன், குன்னூர் எம்.ராஜகோபால், நாகர்கோவில் அகமது ஹுசைன், இக்கூட்டமைப்பின் செயலாளர் எம். கே. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், ஒரத்தநாடு ஸ்டேட் பேங்க் ஸ்டாப் யூனியன் முன்னாள் செயலாளர் வி.சம்பத் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்திருந் தார்.
