2014 ஆம் ஆண்டிற்குப் பிறகான இந்தியா மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக மாறிவிட ஆட்சி யாளர்களால் தூண்டப்பட்ட மதவெறியே காரணாக அமைந்துள்ளது.
சில வினாடி ஓடும் காணொலி
வட இந்தியாவில் ரயில் பயணத்தில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா என்று நோட்டம் பார்த்துப் பார்த்து ஒருவர் தூங்கிக்கொண்டு இருக்கும் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்துவிட்டு அமர்ந்து விடுகிறார். அப்பெண்ணும் ஜன்னலில் இருந்து தண்ணீர் சிதறல் வந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் அது சிறுநீர் வாடை. இந்த நிலையில் இந்த நிகழ்வை சக பயணி ஒருவர் காட்சியாகப் பதிவு செய்ய உண்மை வெளிவந்துள்ளது. ஆனால், என்ன செய்ய? பெரும்பான்மைச் சமூகம் பயணிக்கும் ரயில் பெட்டியில் சிறுபான்மைச் சமூகம் நிர்கதி ஆனவர்கள்தானே! காரணம், ஊழியர்கள் முதல் காவல்துறை வரை காவி மயமாக்கப்பட்டுள்ளதல்லவா?
இந்தக் காணொலி தொடர்பாக ஹிந்து-முஸ்லீம் பார்வையில் பார்க்க வேண்டாம் என்றும், இது அநாகரீகச் செயல், கண்டனத்திற்குரியது என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தச் செயலைச் செய்யும் நபர் மனநோயாளியோ அல்லது போதை நபரோ அல்ல, அப்படி இருக்கும் போது இது போன்ற அநாகரீகமான செயலைச்செய்ய அவரை தூண்டியது எது என்ற கேள்வி சமூகத்தின் மனசாட்சியில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
