கோவை, ஆக. 14- கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், இன்று (14.8.2026) தவெக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக மாணவரணி மாநிலச் செய லாளர் மற்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
பெற்றோர்
குற்றம் சாட்டினார்
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவன் அமுதன் என்பவர் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டதற்கு போதை பொருள் விவகாரம் தான் காரணம் என்று அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டி
னார்.
ஆனால், அந்தக் குற்றசாட்டை காவல் துறையும், கல்லூரி நிர்வாகமும் மறுத்திருந்தது. இந்தச் சூழலில் மாணவன் மரணத்திற்குப் போதை பொருள் நடமாட்டம் தான் கரணம் என வலியுறுத்தி திமுக மாணவரணி போராட்டம் நடத்தினர்.
தவெக அரசின் கவனக் குறைவால் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் புழக்கத்தைப் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த மாணவர் அமுதனை, போதை பொருள் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது. இதனை கல்லூரி நிர்வாகமும், ஆளும் தவெக அரசின் காவல் துறையும் மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர்.
இதனைக் கண்டித்து கோவையில் திமுக மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (14.8.2026) காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில், மாணவர் கொலையை மூடி மறைக்கும் தவெகவைக் கண்டித்து திமுக மாணவர் அணியினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
