ஜிம்பாப்வேயில் படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் உயிரிழப்பு!

சிறப்பு புத்தக சலுகைகள்

கரிபா, ஆக.13- ஜிம்பாப்வே-ஜாம்பியா நாடுகளுக்கு இடையே எல்லையாக அமைந்துள்ள கரிபா ஏரியில், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்த தகவல்கள்

அரசு முகமையால் இயக்கப்பட்டு வந்த அப்படகில் 90 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ள நிலையில், கடந்த 11.8.2026 அன்று விபத்து நிகழ்ந்தபோது 114 பெரியவர்கள், 5 பணியாளர்கள் என குறைந்தது 119 பேர் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயணச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே இந்த கணக்கில் அடங்குவர் என்பதால், பயணச்சீட்டு தேவையில்லாத சிறுவர்கள் எத்தனை பேர் படகில் இருந்தனர் என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

விபத்து நடந்தவுடன் ஹெலிகாப்டர், விரைவுப் படகுகள் மூலம் நடைபெற்ற மீட்புப் பணியில் 77 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் ஏரியிலிருந்து தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவதாக ஜிம்பாப்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *