திருச்சி, ஆக.12- 8ஆம் வகுப்பு மாணவி கே.லக்ஷனா, நவரச நாட்டியாலயா நடத்திய பரதநாட்டியத்தில் சிறப்பான பங்களிப்பிற்கான அங்கீகாரம் பெற்று பதக்கமும், சான்றிதழும் வென்றார். அதனைத்தொடர்ந்து தனி மற்றும் குழு நடனத்தில் அதிகபட்ச பங்கேற்புடன் கூடிய உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றார்.

6ஆம் வகுப்பு மாணவி சி.சிஃபா 4ஆவது பன்னாட்டு சிலம்பம் வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வென்றார். அதனைத்தொடர்ந்து தேசிய சிலம்பம் வாகையர் போட்டியில் (Open National Championship – Silambam) பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப் படுத்தினர்.
