15 நாட்களுக்கு காவிரி நீர் 12,000 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக. 12- காவிரி​யில் இருந்து தமி​ழ்நாட்டிற்கு 15 நாட்​களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை கரு​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது.

கடந்த‌ ஜூலை 28 ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தில் தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு நாள்தோறும் 3,500 கன அடி நீரை
திறந்​து​விட கருநாடகா​வுக்கு உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், தமிழ்​நாட்டிற்கு  நீர் திறக்​கப்​பட​வில்​லை.

140 ஆவது கூட்​டம்

இந்​தச் சூழ்​நிலை​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தின் 140 ஆவது கூட்​டம் டில்​லி​யில் அதன் தலை​வர் வினீத் குப்தா தலை​மை​யில் நேற்று (11.8.2026) நடை​பெற்​றது. இதில் கருநாட​கா, தமிழ்​நாடு, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களைச் சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதி​காரி​கள் பங்​கேற்​ற​னர்.

முறை​யாக
வழங்
​க​வில்​லை!

தமி​ழ்நாட்டு அரசின் தரப்​பில், “உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பின்​படி கரு​நாடக அரசு காவிரி​யில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் தமி​ழ்நாட்டிற்கு  வழங்க வேண்​டிய நீரை மாத​வாரி​யாக முறை​யாக வழங்​க​வில்​லை.

இதனால் மேட்​டூர் அணை​யில் பாசனத்​துக்​காகத் திறக்​கும் அளவுக்கு நீர் இருப்பு
இல்லை. ஆகஸ்ட் மாத தொடக்​க‌த்​தில் இருந்தே காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் கனமழை பெய்கிறது. எனவே கருநாடக அரசு தமி​ழ்நாட்டிற்கு வழங்க வேண்​டிய நிலுவை நீரை திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என்று வலி​யுறுத்​தப்​பட்​டது.

கரு​நாடகா மறுப்பு

அதற்கு கருநாடக அரசின் தரப்​பில், “கருநாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களுக்குப் போதிய நீர் வரவில்​லை. கடந்த இரு வாரங்​களாகக் கணிச​மாக மழை பொழிந்​த​தால் கபினி, ஹாரங்கி ஆகிய அணை​ கள் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளன.

தற்​போது கிருஷ்ண​ராஜ சாகர், கபினி உள்​ளிட்ட 4 அணை​களி​லும் சேர்த்து 77.746 டிஎம்சி நீர் இருப்​பில் உள்​ளது. இந்த அளவானது கடந்த 30 ஆண்​டு​களில் இருந்த நீரின் அளவை​விட 47 சதவீதம் குறை​வானது. இந்த நிலை​யில் தமி​ழ​கத்​துக்கு நிலுவை நீரை முழு​வது​மாக திறக்க இயலாது” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுத் தலை​வர், “உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வின்​படி தமி​ழ்நாட்டிற்குக்  காவிரி நீரை திறந்​து​ விட கரு​நாடகா முன்வர வேண்​டும். தமி​ழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்​களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விட வேண்​டும். இதனை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரு மாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமி​ழ்நாட்டிற்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்​டும்” என்று பரிந்துரைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *