‘நீட்’ தேர்வு ரத்து! 6ஆவது நாளாக தொடரும் பட்டினிப் போராட்டம்! போராட்டக்காரர் மருத்துவமனையில் அனுமதி!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 6- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை சின்மயா நகரில் கடந்த 6 நாட்களாகத் தொடர் பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று வந்த ரவி என்பவருக்கு, இன்று அதிகாலை திடீரெனக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவின்றித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், போராட்டக் காரர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *