கவிஞர் கலி.பூங்குன்றனுக்குப் பெரியார் பன்னாட்டமைப்பின் (அமெரிக்கா) ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கப்பட்டது!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் (அமெரிக்கா) ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’’ அவ்வமைப்பின் தலைவர் டாக்டர் இலக்குவன் தமிழ், இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வழங்கினர். உடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மும்பை, லெமூரியா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சு.குமணராஜன், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ஆசிரியர் ப.திருமாவேலன், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம், தணிக்கையாளர் நா.மாறன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு (சென்னை பெரியார் திடல், 4.8.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *