சென்னை, ஆக. 3- திமுக மேனாள் அமைச்சர் ரகுபதி நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் கருநாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கொச்சைப் படுத்தி பேசியுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய், நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் காவிரி, மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறவில்லை.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப் பாட்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும், ஆலோசனை கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன என்று அவர் தெரிவித் துள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்! மேனாள் அமைச்சர் ரகுபதி உறுதி
Leave a Comment
