‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைத் தோழர்களுக்கு சட்டப் பேரவையின் மேனாள் தலைவர் வாழ்த்து

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தென்காசி, ஜூலை 31- தென்காசியில் நேற்று (30.7.2026) தொடங்கவிருந்த நீட்எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோருக்கு, திராவிடர் இயக்கத்தின் அடிநாதம், சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலிமேற்கு  மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பயனாடை போர்த்தி சிறப்பித்தார்.

ஆசிரியர் அவர்கள் தங்களைப் போன்ற தளபதிகளை தயார் செய்து வைத்துள்ளார், 93 வயதில் அவர்கள் ஓய்வின்றி விடுதலையில் எழுதுவதும், கூட்டங்களில் பேசுவதும் வியப்பாகவுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகனுடன் நன்றி கூறி விடைபெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் (29.7.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *