சிதம்பரம் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் ஆசிரியர் எழுதிய நூல் அறிமுக விழா

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் மாவட்ட ப.க. சார்பில் 18-07-2026இல், சேத்தியாத்தோப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழாக் கூட்டம் நடராசா திருமணக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் கோ.நெடுமாறன் தலைமையில், மாவட்ட செயலாளர் அ.செங்குட்டுவன் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட கழகச் செயலாளர் கோவி.பெரியார்தாசன், அன்புசித்தார்த்தன், இராஜசேகரன், பேராசிரியர் ப.கலைச்செல்வன் ப.க, க.கதிரவன் ப.க ஆகியோர் முன்னிலையில் நெய்வேலி அருணாசலம் தொடக்க உரையாற்றினார். கோவை க.வீரமணி நூலை அறிமுகம் செய்து ஆய்வுரை ஆற்றினார். நூல்கள் விற்பனை நடந்தது.

ஏராளமான ப.க.வினரும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *