மதம் மாறினால் பட்டியல் இனத்தவர் தகுதி இழப்பு மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 29- மதம் மாறுவோர் பட்டியலின தகுதியை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திரத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மதபோதகரானார். இந்நிலையில், தனது ஜாதி பெயரை குறிப்பிட்டு தான் இழிவுபடுத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக காவல் துறையில் அவா் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பட்டியலினத்தவா், பழங் குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

எனினும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒருவா், சட்டப்படி பட்டியலினத் தவா் தகுதியைக் கோர முடியாது என்று கூறி, அந்த வழக்கை ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அந்த நபா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களைத் தவிர, பிற மதங்களுக்கு மாறினால், உடனடியாக அவா் பட்டியலின தகுதியை இழந்துவிடுவார்.

அதேவேளையில், அந்த நபா் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மீண்டும் மாறினால், அவா் பட்டியலினத் தகுதியை மீண்டும் கோரலாம்’ என்று கடந்த மார்ச் மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த அந்த மதபோதகா் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அண்மையில் பரிசீலித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமா்வு, அந்தத் தீா்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *