திருவண்ணாமலை, ஜூலை 26 திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் உயிரிழந்தார். உடல் பருமன் காரணமாக வெளியில் வர முடியாமல் தவித்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
