குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் தகவல்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 19– மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ் சாட்டப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் உச்சநீதிமன்றாத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடி யுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை,
எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப் பிறகு வெளி யான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதற்காக குடியுரிமை இழந்ததாகக் கருதக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும், மேற்கு வங்க எஸ்.அய்.ஆர். பணிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகள் வரும் ஆகஸ்ட் மாதம் விசா ரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *