இஸ்தான்புல், ஜூலை 15- துருக்கியில் மகப்பேற்றின் போது அறுவைப் பண்டுவம் மேற்கொண்டதற்காக
100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் கடைசியாகக் கிடைத்த தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் அறுவைப் பண்டுவம் மகப்பேறுகளின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த ஆண்டில் அங்கு நடந்த ஒவ்வொரு 1,000 நேரடி மகப்பேறுகளிலும் சுமார் 615 மகப்பேறுகள் அறுவைப் பண்டுவம் முறையில் செய்யப்பட்டுள்ளன.
பெண்கள் இயற்கை முறையில் மகப்பேறு அடை வதை வலியுறுத்தி வரும் துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டில் அதிகரித்து வரும் விருப்பத் தேர்விலான சிசேரியன் மகப்பேறுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக, தகுந்த மருத்துவக் காரணம் இன்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் அறுவைப் பண்டுவம் செய்வதற்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
