வியட்நாம் படகு விபத்து உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேரின் உடல்களை சென்னை கொண்டு வர தனி விமானம் ஏற்பாடு!

1 Min Read

மும்பை / சென்னை, ஜூலை 14  வியட்நாமில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் நேற்று (13.7.2026) இரவு விமானம் மூலம் மும்பை வந்தடைந்தன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களைச் சென்னைக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் தனி விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 வியட்நாமில் நிகழ்ந்த சோகம்

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பூ குவாக் (PhuQuoc) தீவு அருகே 36 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அதிவேகப் படகு ஒன்று, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் 10 பேர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர ஒன்றிய வெளியுறவுத் துறையும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தூதரகம் மூலம் உடல்கள் ஒப்படைப்பு

வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (13.7.2026) வெளியிட்ட சமூக ஊடக அறிக்கையில்: “விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் (VN979) மூலம் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்களைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தினரிடம் சேர்க்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.”

தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை

திட்டமிட்டபடி நேற்று (13.7.2026) இரவு 15 பேரின் உடல்களும் மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தன. அங்கு உடல்கள் அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்களையும் மும்பையிலிருந்து சென்னைக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பில் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கொண்டு வரப்பட்டதும், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *