தனது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் – ‘கருவேலம் பூக்கள்’ திரைப்பட இயக்குநர் பூமணி அவர்கள் நேற்று (12.07.2026) இரவு மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். ஜாதிப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவலங்களுக்கெதிரான குரலைப் பிரதிபலித்த இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படம், இவரது ’வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்தாளர் பூமணி அவர்களின் மறைவுக்கு நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.7.2026
