தாம்பரம், ஜூலை 12 சிறீ சாய் ராம் கல்விக் குழும நிறுவனரும், சமூக சேவகருமான லியோ முத்துவின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரைகளில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 10.7.2026 அன்று நடைபெற்றது.
இதில் சிறீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து பேசியதாவது:
அரிமா லியோ முத்துவின் கல்வி, சமூக சேவைப் பணிகளை நினைவுகூரும் வகையில், சுற்றுவட்டாரக் கிராமங்களில் பயன்தரும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மடிப்பாக்கத்தில் பள்ளியைத் தொடங்கி, படிப்படியாக தனது விடாமுயற்சி மூலம் பல பொறியியல், மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர் களை தொழில்திறன் மிக்கவர்களாக உள்நாடு, வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அவரது வழியில் கல்வி வளர்ச்சிப் பணிகள் தொடரும்.
அவரது விருப்பப்படி, ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
