‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனையால் – தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் தேசிய சராசரியை விடக் குறைவு

1 Min Read

சென்னை, ஜூலை 10 ‘ஒன்றிய கல்வித் துறையின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல், தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது’ என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒன்றிய கல்வித்துறை வெளியிட்ட கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை அறிக்கை 2025 – 2026 இல், பல்வேறு முக்கிய குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

மாநிலத்தின் மாணவர் – ஆசிரியர் விகிதம் 22:1 என்ற நிலையில் உள்ளது. இது, தேசிய சராசரியான 24:1 என்பதை விட சிறப்பாக உள்ளது. மேலும், தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. இடைநிலை கல்வியில் இடைநிற்றல் விகிதம் 6.2 சதவீதம்; இது, தேசிய சராசரியான 9.5 சத வீதத்தை விட குறைவு.

மாணவர் சேர்க்கையிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. 10 ஆம் வகுப்புக்கு அடுத்த மேல்நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 85.1 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அய்ட்ரஜன்தானாம்!

8 போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் அய்ட்ரஜன் எரிபொருள் தான் என்றும், 10 வழித்தடங்களில் இதற்கான சோதனை நடந்து வருவதாக ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *