மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். உடன்: வேலுச்சாமி, இரா.ஜெயக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

வேலூர் மாவட்ட மகளிரணியினர் ஈஸ்வரி சடகோபன், கலைமணி, சுமதி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். • நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கிய பெரியார் பெருந்தொண்டர் வாரிசுகள் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் தேவராசன், மருத்துவர் மணிமேகலை ஆகியோர் சார்பில் வாழப்பாடி அமிர்தம் சுகுமார் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். • செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோ, தி.காமராஜ் ஆகியோர் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர். • கருநாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகை தந்த முல்லைக்கோ, வழக்குரைஞர் குணவேந்தன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ‘விடுதலை’ சந்தா வழங்கினர்.

சென்னை தனலட்சுமி தங்கமணி, வழக்குரைஞர் மணி, கிருட்டினகிரி திராவிட மணி மற்றும் சேலம் பகுதித் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர்.

கன்னியாகுமரி கோ.வெற்றிவேந்தன், அத்திவெட்டி வீரையன், கோபி யோகானந்தம் ஆகியோர் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர்.
