தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான செழியன் அவர்கள் இன்று (10.7.2026) காலை உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். இளம் வயதிலேயே திரையுலகில் குறிப்பிடத்தக்க தனித்துவமான அடையாளமாகத் திகழ்ந்தவர். சீரிய பகுத்தறிவாளர். அவரது கலை உலகச் சாதனைகளுக்காக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் “பெரியார் விருது” வழங்கி மகிழ்ந்தோம். இன்னும் பல சாதனைகளை அவர் செய்ய வேண்டிய வயதில் அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் இழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், கலை உலகத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.7.2026
