பட்டாபிராம் ஜெயபிரகாஷ் மறைவு

1 Min Read

தியாகி மதுராந்தகம் துரைபாபுவின் மூத்த மகனும், தீவிர பெரியாரிய கொள்கைவாதியும், டாக்டர் ராகுலின் தந்தையுமான து.ஜெயபிரகாஷ் நாராயண் (வயது 81) வயது மூப்பின் காரணமாக 26.6.2026 அன்று காலை 9.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் அவரது பட்டாபிராம் (88, லெட்சுமி நகர், நெமிலிச்சேரி) இல்லத்திலிருந்து 27.6.2026 பகல் 2 மணிக்கு புகழ்வணக்கம், வீரவணக்கம் எழுச்சி முழக்கங்களுடன் புறப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் அம்பத்தூர் நவீன எரிவாயு தகன மேடையில், முழு பெரியாரிய கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கு, சம்பிர தாயங்களும் இன்றி எளிமையாக உடல் எரியூட்டப்பட்டது.

து.ஜெயபிரகாஷ் நாராயணன் 50 ஆண்டுகளுக்கு முன்பே தன் திருமணத்தை இராகுகாலத்தில் ஜாதி ஒழிப்புத் திருமணமாக தாலியில்லா திருமணமாக நடத்திக் காட்டியவர் என்பதுடன், தன் மூத்த மகனுக்கும் (மூத்த மகன் டாக்டர் ராகுல்) 2009இல் சீர்காழியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இராகு காலத்தில் ஜாதி ஒழிப்புத் திருமணம் நடத்திக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *