திருச்சி, ஜூலை 6- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி அய் பவுண்டேசன் மற்றும் மணிகண்டம் அரிமா சங்கம் இணைந்து O5.07.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பொது மருத்துவம், கண் பரிசோதனை, மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாமினை இனாம் மாத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் நடத்தியது.
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் கோவிந்தராஜ் வர்தனன் மற்றும் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரையின் ஒருங்கிணைப்பில் மணிகண்டம் அரிமா சங்கத் தலைவர் பிரின்ஸ் ரமேஷ், துணைத் தலைவர் திருப்பதி, மண்டலத் தலைவர் தங்கவேல், தொழிலதிபர் சிவசுப்ர மணியம் மற்றும் சேவை நாயகன் அபுபக்கர் ஆகியோர் முன்னிலையில் மணிகண்டம் மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா மற்றும் மாத்தூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதிதாசன் ஆகியோர் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இதில் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மருத்துவர் சுகிர்தா தலைமையில் பல் மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனையும், திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவர் மரு. முனவர் சுல்தானா தலைமையில் பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது.
மேலும் திருச்சி அய் பவுண் டேஷன் ஆப்டோமெட்ரிஸ்ட் மது தர்ஷினி தலைமையில் கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் துறைத் தலைவர் மரு. கல்யாணசுந்தரம் மற்றும் பல் மருத்துவத் துறைத் தலைவர் மரு. ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த இம்மருத்துவ முகாமில் 31 ஆண்கள், 21 பெண்கள், ஒரு குழந்தை என மொத்தம் 53 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் கண் பரிசோதனை முகாமில் 27 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மணிகண்டம் அரிமா சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. தினேஷ், பேராசிரியர்கள் கோகிலவாணி, ஷெரன் செல்சியா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவப் பயனாளி களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர் காமாட்சி மற்றும் செவிலிய மாணவி பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற் கொண்டனர்.
மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மணிகண்டம் அரிமா சங்கம் சிறப்பாக செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.
