பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம்

1 Min Read

ஸ்ருதி – நிச்சிரன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்கள் இருவரும் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இவர்களுடைய பார்ப்பன நண்பர்கள் நம் திருமண நிலையத்தில் பெற்றோர் முன்னிலையில் இணையேற்பு நடத்திக் கொண்டவர்கள்.

முதலில் தங்கைக்குத் திருமணம் நடைபெற்றது. சிறிது நாள்கள் கழித்து அவர்கள் அண்ணனுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அதுமட்டுமல்ல ‘விடுதலை’ நாளிதழும் இவர்கள் இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒருவாரம் ‘விடுதலை’ நாளிதழ் அவர்கள் வீட்டிற்குப் போகாத காலத்தில் கைப்பேசியில் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரியை தொடர்பு கொண்டு “ஏன் விடுதலை எங்களுக்கு வரவில்லை” என்று கேட்டவர்கள். அவர்கள் வாயிலாக இது மூன்றாவது பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வாகும். (சென்னை, 1.7.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *