சேலம் பொதுக்குழுவில் களப் போராளிகள் பட்டியலை அளிக்க ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஆவடி, ஜூலை 1- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026 அன்று மாலை 06-00 மணிக்கு மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற தொடங்கியது.

முதலாவதாக அண் மையில் காலமான திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

அடுத்ததாக 08-06-2026 அன்று ஆவடி மாவட்டம் பட்டாபி ராம் பகுதியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் 103ஆவது பிறந்த நாள் விழா கூட்ட வரவு – செலவு மாவட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலத்தில் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு களப் போராட்டத்திற்கு ஆயிரம் இளைஞர்கள் பட்டியலோடு வருக என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க ஆவடி மாவட்டக் கழகம் சார்பாக இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பட்டியலை பொதுக்குழுவில் வழங்குவது.

அம்பத்தூர் பகுதியில் நடைபெற இருந்த கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா  கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அக் கூட்டத்தை ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்துவது.

மாவட்டக் கழகம் சார்பாக விரைவில்  “கொள்கை குடும்ப உறவுகள் சந்திப்பு விழா” நடத்தவது.

மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி அம்பத்தூர் நகர கழகத் தலைவர் பூ.இராம லிங்கம், செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் நகர கழக தலைவர் இரணியன், பட்டாபிராம் நகர கழக தலைவர் இரா.வேல்முருகன், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், மாவட்ட கழகத் துணைச்செயலாளர் தமிழ்ச் செல்வன், ஆவடி புருசோத்தமன் ஆகியோர் உரையாற்றிய பின் மாவட்ட கழக தலைவர் வெ.கார் வேந்தன் உரையாற்றினார்.

இறுதியாக பட்டரவாக்கம் ரவிச்சந்திரன் நன்றி கூற கூட்டம் முடிவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *