எங்களுடைய அன்பு அழைப்பையேற்று, 16.06.2026 அன்று தஞ்சைக்கு வருகை புரிந்து, என் தந்தையார் நினைவில் வாழும் சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் புகழ் மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிப் பெருமை சேர்த்துத் தந்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மிகுந்த நன்றிகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மேலும் தாங்கள் உரையாற்றும்போது, “சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் பெயர் நிலைபெறும் வகையில், வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டடம் ஒன்றுக்கு உபயதுல்லாவின் பெயர் பொறிக்கப்படும்” என்று குறிப்பிட்டீர்கள். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு வார காலத்திலேயே உடனடியாக அச்செயலை நிறைவேற்றித் தந்தமையை அறிந்து மிகவும் மகிழ்கிறோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை என்றைக்கும் நெஞ்சில் சுமந்து வாழ்ந்து மறைந்த என் அத்தா உபயதுல்லா அவர்களுக்கு மிகவும் சிறப்புச் சேர்த்திருக்கிறீர்கள். தங்களுடைய பெரிய உள்ளத்தையும், என் தந்தையார் மீது தாங்கள் கொண்டிருந்த அளப்பரிய பற்றினையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறோம். தங்களுடைய பேருள்ளத்திற்கும், செயற்கரிய செயலுக்கும் என்றைக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
பணிவுடன்,
சி.நா.மீ.உ. பரிதாபேகம்
தலைவர், தஞ்சை முத்தமிழ் மன்றம், தஞ்சாவூர்
