திராவிட இயக்க மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள் இன்று (27.6.1962)

1 Min Read

திராவிட இயக்க வர லாற்றில் 1938ல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருமைல் கல்லாகும். இந்தப் போராட்டத்தில் திருச்சி, உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் ஹிந்தி எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 577 மைல்கள் நடந்தே வந்தவர் இவர். 87 பொதுக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.

மேலும், சென்னையில் பள்ளி முன் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, மறியல் செய்து கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் இருந்தார்.

இவரின் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம் தி.மு.க. சார்பில் அண்ணா வழங்கிய விருதுதான். சுயமரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் விருது வழங்கி சிறப்பிக்க அண்ணா முடிவு செய்தார். இதற்கு இவருடைய பெயரைத்தான் அண்ணா முதன்முதலில் தேர்வு செய்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, முதல்முறையாக ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கு “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்” என்று இவரது பெயரை வைத்து, தொடர்ந்து செயல்படுத்தினார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 64ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (27.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *