கொளுத்தப்போகும் வெயில், திடீர் வெள்ளம்: உலகையே அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’?

நாசாவின் ‘சென்டினல்-6′ செயற்கைக்கோள் தரவு களின்படி, பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பமடைந்து கடல் மட்டம் உயர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது உலகையே அச்சுறுத்தக்கூடிய “சூப்பர் எல் நினோ” ஏற்கெனவே தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாகும்.

நாசாவின் சமீபத்திய கணிப்பின்படி, உலகையே அச்சுறுத்தக்கூடிய “சூப்பர் எல் நினோ” என்னும் சக்திவாய்ந்த காலநிலை நிகழ்வு ஏற்கெனவே தொடங்கியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வெப்பமான நீர் பரவிவருவதை சாட்டிலைட் தரவுகள் காட்டுகின்றன. இது வரும் மாதங்களில் உலகளாவிய வானிலை சீர்குலைவு, கடும் வெப்பம், கடும் குளிர் மற்றும் மழைப்பொழிவு மாறுபாடுகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

சூப்பர் எல் நினோ: உண்மையில் தொடங்கிவிட்டதா?

பசிபிக் பெருங்கடலில் தற்போதைய காலநிலை சூழல் கணிசமாக வலுவடைந்துவருவதாக அறிவியல் சான்றுகள் கூறுகின்றன. அங்கு தென்படும் பல்வேறு அறிகுறிகள் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகி வருவதை உறுதிப்படுத்து கின்றன. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வெப்ப நிலை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக உயர்வதையே ‘சூப்பர் எல் நினோ’ என்கிறோம். இது உலகளாவிய வானிலை அமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய கடல் சூழலின்படி, இந்த நிகழ்வு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது என்று நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நாசா கண்டறிந்தது என்ன?

உலகெங்கிலும் உள்ள கடல் மட்டத்தின் உயரத்தைக் வரைபடமாக்கும் ‘சென்டினல்-6 மைக்கேல் ஃபிரெய்லிச்’ (Sentinel-6 Michael Freilich) என்ற சாட்டிலைட் மூலம் நாசா இந்த அளவீடுகளை மேற்கொண்டுள்ளது. இதன் புதிய வரைபடங்கள், கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் கடல் மட்டம் இயல்பான அளவை விட அதிகமாக உயர்ந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. தண்ணீர் வெப்பமடையும் போது அது விரிவடைந்து கடல் மட்டம் உயர வழிவகுக்கும் என்பதால் இந்தத் தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, செயற்கைக்கோள் கண்டறிந்துள்ள இந்த அசாதாரண வெப்பம், கடல் மேற்பரப்பின் மேல்மட்ட வெப்பநிலை அதிகரித்திருப்பதற்கான வலுவான அறிகுறியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மழைப்பொழிவு மாறுமா? எல் நினோ பெரியதா?

ஆம், நிச்சயம் பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது. எல் நினோ உலகளாவிய மழைப்பொழிவு முறையை மாற்றிய மைக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக சில பகுதிகளில் அதிக மழையும், சில பகுதிகளில் வறட்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தெற்கு பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழைப்பொழிவே பதிவாகக்கூடும்.

1997-ஆம் ஆண்டுடன் ஒரு ஒப்பீடு

வரலாற்றிலேயே மிக வலுவான எல் நினோ நிகழ்வாகப் பதிவான 1997-1998 எல் நினோவுடன் தற்போதைய நிகழ்வை ஆய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அப்போது பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட கடல் வெப்பநிலை மாறு பாடுகளும், கடல் மட்ட உயர்வும் தான் இப்போது மீண்டும் தென்படுகின்றன. 1997 நிகழ்வின்போது பல கண்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் கடுமையான வானிலை பாதிப்புகளுடன் இது ஒப்பிடத்தக்க வகையில் தீவிரமாக உள்ளது.

உலகம் இதை எப்படி எதிர்கொள்கிறது?

பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், காலநிலை அமைப்புகள் மற்றும் விவசாய வல்லுநர்கள் இந்த நிலை மையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஒரு வலுவான எல் நினோ தாக்கம், பல நாடுகளின் பயிர் உற்பத்தி, நீர் விநியோகம், ஆற்றல் தேவை மற்றும் பேரிடர் ஆயத்த நிலை ஆகியவற்றைப் பாதிக்கலாம். மேலும், இது உலகளாவிய வெப்பநிலையை சராசரியை விட அதிகரித்து, சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகளுக்கான வாய்ப்புகளையும் கூட்டக்கூடும்.

விஞ்ஞானிகளின் எச்சரிக்கை என்ன?

வானிலை மாற்றங்களைச் சமாளிக்க அரசாங்கங்களும், பொதுமக்களும் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அவசர அழைப்பு விடுத் துள்ளனர். இதன் உண்மையான வலிமையையும் தாக்கத் தையும் துல்லியமாகக் கணிப்பது எளிதல்ல என்றாலும், பசிபிக் பெருங்கடலின் இந்த வெப்பமயமாதல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்து கின்றனர். தொடர்ந்து வலுவடைந்து வரும் இந்த ‘சூப்பர் எல் நினோ’, இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக மாறி, உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *