அறந்தாங்கி,, ஜூன் 23- 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சுற்றுப்பயணம் அறந்தாங்கி, பாலசுப்பிரமணியபுரம், அத்தாணி, திருவாப்பாடி, கட்டுமாவடி, மணல்மேல்குடி, மீமிசல், நிறைவாக புதூர். ஆகிய பகுதிகளில் கழகத் தோழர்கள் மற்றும் இளைஞரணி யினரை இல்லங்கள் தோறும் சந்தித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டு கோளின்படி 1000 இளைஞர்கள் அறப்போராட்ட கள வீரர்கள் பட்டியலில் அறந்தாங்கி மாவட்ட கழகத்தின் சார்பில் 15 இளைஞர்கள் பட்டியல் வழங்கிடவும்,
கழக இளைஞரணி சார் பில் அந்தந்தப் பகுதிகளில் தொடர்ச்சி யான பரப்புரை வாயிலாக இளைஞர்களை இயக்கத்தில் இணைத்திடவும்,
ஜூன் 25, 26, 27, 28, ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் நடைபெற உள்ள 47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு அறந்தாங்கி மாவட்ட சார்பில் 5 இளைஞர்களை அனுப்பி வைப்பது எனவும் உறுதி அளித்துள்ளனர்.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாவட்டச் செயலாளர் ஜெகதை.குமார் ஆகியோர் பயணத்தை மேற்கொண்டனர். அந்தந்தப் பகுதி தோழர்கள் ஆங்காங்கே கலந்து கொண்டனர்.
