பட்டுக்கோட்டை, ஜூன் 22- திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப கடந்த 07.06.2026 அன்று பூக்கொல்லை கடைவீதியில் கழக மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் சேது பாவா சத்திரம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும், மேனாள் ஒன்றிய பெருந்தலைவருமான மு.கி. முத்துமாணிக்கம், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்குரைஞர் குழ.செ. அருள் நம்பி, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செ.ஞான பிரகாசம், சேது பாவாசத்திரம் ஒன்றிய கழகத் தலைவர் சி .செகநாதன், ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சண்முகவேல் ஆகியோர் முன்னிலையிலும், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் வரவேற்புரையுடனும் நடை பெற்றது.
கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேரா வூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா. அசோக் குமார் கலந்து கொண்டு பல் வேறு கருத்துகளை எடுத்து வைத் தார்.
கூட்டத்தில் கழக சொற் பொழிவாளர் ஆரூர் தேவ.நர்மதா கலந்து கொண்டு திராவிட இயக்கத்தின்செயல்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி செய்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும், திராவிடர் இயக்கத்தை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்லும் தலைவராக இளம் தலைவர் உதயநிதி திகழ்ந்து வருகிறார் எனவும், எனவே இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கத்தினுடைய அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து அரசியல் மய்யப்படுத்துவோம்.என்றும் எடுத்து கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப் பானதொரு உரை நிகழ்த்தினார் .
கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், மேனாள் சேது பாவா சத்திரம் ஒன்றிய திமுக செயலாளர் கு. சின்னப்பா மேனாள் மாவட்ட குழு உறுப்பினர் கே. காமராஜ், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சு.வசி, மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் க.சசிகுமார், நகர கழகத் தலைவர் சி. சந்திரமோகன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செ.பொ. மதியழகன், திமுக மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகம்மது, ஒன்றிய இளைஞ ரணிச் செயலாளர் மதன், நெல்லியடிக்காடு முருகேசன், அகமது யாசின், முனைவர் அசன் முகைதீன் உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார் .
கூட்டத் தொடக்கத்தில் மாவட்ட கழக துணை செயலா ளர் சோம. நீலகண்டன் வழங்கிய மந்திரம் அல்ல? தந்திரமே? என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.
பேராவூரணி கழக ஒன்றியச் செயலாளர் சித்தாதிக்காடு
அ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
