காட்டுமன்னார்குடியில் கலைஞரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

1 Min Read

காட்டுமன்னார்குடி, ஜூன் 13- சிதம்பரம் மாவட்ட கழக சார்பில், காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் 10.06.2026 அன்று மாலை 6.30 மணிக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் நகர தலைவர் பொன்.பஞ்சநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தருமர்.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அ.முத்துசாமி, காட்டுமன்னார்குடி பேரூராட்சித் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி, கழக சொற்பொழிவாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் பேசிய பின்னர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் இரா.செல்வ கணபதி, திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, திருமுட்டம் ஒன்றிய செயலாளர் இரா.இராசசேகரன், பெரியார் பெருந்தொண்டர் சுந்தரமூர்த்தி, தி.மு.க.அவைத் தலைவர் கருணாநிதி, நகர தி.மு.க. பொருளாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இறுதியாக, ஒன்றிய கழக அமைப் பாளர் கீழ்க்கடம்பூர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *