பருவமழை தொடக்கம்! கேரளாவுக்கு விரைந்தது அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை!

அரக்கோணம், மே 20- தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) வீரர்கள் அவசர அவசரமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

கேரள அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மீட்புப்படை முகாமில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ளவும் கேரளாவின் முக்கிய 8 மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழுக்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மீட்புக்குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *