த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடருகிறோம்! பேராசிரியர் காதர் மொகிதீன் தகவல்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 11– இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் நாட்டில் ஆளுநர் ஆட்சி என்பது வரவேற்புக்கு உரியது அல்ல என்பதையும் ஜனநாயக அரசு உருவாக்குவதை தவிர்த்தால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்மட்டக் குழு கருதுவதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பேணிக் காப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் த.வெ.கா.வுக்கு ஆதரவு என்ற முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே நிலையில் தொடரும் என்றும் தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான ஆட்சி உருவாவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்டக்குழு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதாக மொகிதீன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *