கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெருமாத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு. பழனியாண்டி (வயது 93) அவர்கள் இன்று (7.5.2026) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
புவனகிரி என்பது நமது இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பகுதியாகும். ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரிகளில் ஒருவராக இருந்த கே. நவசிவாயம், அ.சச்சிதானந்தம் (மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர்) ஆகியவர்களோடு, நமது பழனியாண்டி அவர்கள் இயக்கப் பணியில் முழு மூச்சாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் ஆவார். மறைந்த நிலையிலும் தனது உடலை மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இறுதி மூச்சைத் துறந்த அந்தப் பெரியார் பெருந்தொண்டர் என்றும் நமது நினைவிற்குரியவர் ஆவார்!
அத்தகைய பெருமகனாரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும் குறிப்பாக அவரது மகன் குணசேகரன், மகள் வள்ளி ஆகியோருக்கும், கழகத்தினருக்கும் இயக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.5.2026
குறிப்பு: சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவனிடம் கழகத் தலைவர் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்தார்.
