அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்! தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு

1 Min Read

சென்னை. மே 6- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என, தொழில் நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் கல்வி ஆண்டில் (2026-2027) அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமா படிப்பில் முதலாம் ஆண்டு சேரவும், பகுதி நேர டிப்ளமா படிப்பில் சேரவும் இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர படிப்பில் சேர 2 ஆண்டு கால அய்டிஅய் முடித்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் ரூ.150. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சிறப்புப் பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள், விண்ணப்பதாரர் ஒளிப்படம் ஆகியவற்றை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணைய வழியில் விண்ணப் பிக்கக் கடைசி நாள் மே 30ஆம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அதில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *