பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி, ஈரோடு பாண்டியன், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கோ.சத்யாமூர்தி, திமுக மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கண்ணன், தமிழியக்கம் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், புரட்சிகர தொழிலாளர் முன்னணி கார்கி மற்றும் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.
பேராசிரியர் கு.வணங்காமுடி நினைவு நாள்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
