திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு! ஒரு நபர் ஆணையம் குற்றச்சாட்டு

அமராவதி, மே 4: திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் நடைமுறையில் கடுமையான விதி மீறல்கள் மற்றும் தரக் கண்காணிப்பு குறைபாடுகள் இடம் பெற்றுள்ளதாக ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் தேவையான உபகரணங்கள் இல்லாததால் நேரடி தரச்சோதனைகள் தாமதமாக நடத்தப்பட் டன. மேலும், புகார்கள் மற்றும் தரக் கண்காணிப்பு அமைப்புகள்பெரும் அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தவறு களுக்கு திருப்பதி தேவஸ்தா னம், கொள்முதல் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளே பொறுப்பேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் தெரி விக்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *