எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுபற்றி கேட்டதும் உளறிய ஒன்றிய அமைச்சர்

கருநாடக மாநிலம் ஹுப்ளியில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பத்திரி கையாளர் ஒருவர்,”தேர்தல் முடிந்த உடனேயே எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதே. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் அவர் அதிர்ச்சி அடைந்து, சில வினாடிகள் பேசாமல் நின்றார். ஆனாலும் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச் சர் ஷோபா,”மகளிருக்கு 33% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இது 30 ஆண்டு களாக நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் மகளிருக்கு நீதி வழங்குவது குறித்து மீண்டும் மீண்டும் பேசி வரு கின்றன. ஆனால் உண்மையில் மகளி ருக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது” என கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி, அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு

2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

புதுச்சேரி, மே 4 புதுச்சேரி அரசு ஊழியர் களுக்கு அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்தி 3.5.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவு:

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2026 முதல் அடிப்படை ஊதியத்தில் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் அடிப்படை ஊதியமானது, அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 7-ஆவது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பெறப்படும் ஊதியத்தைக் குறிக்கும். சிறப்பு ஊதியம் போன்ற எந்த வகை ஊதியத்தையும் உள்ளடக்காது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 2 சதவீத அகவிலைப்படி உயர்வு புதுச்சேரியிலும் 1.1.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவு அனைத்து செயலகத் துறைகள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் அனைத்துத் துறைத் தலைவர்கள், அலுவலகத் தலைவர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கணக்குகள் மற்றும் கருவூலத் துறைக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *