போர்ட் பிளேயர், ஏப்.25- அந்தமான் கடற்பகுதியில் நேற்று (24.4.2026) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
நேற்று (24.4.2026)அதிகாலை கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மய்யம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் இருந்ததால், கடலோரப் பகுதிகளில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உள்ள நில அதிர்வுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் நில அதிர்வு மண்டலத்தில் (Seismic Zone V) அமைந்துள்ளதால், இங்கு அவ்வப்போது லேசானது முதல் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
