சென்னை, ஏப்.19 தமிழ்நாடு முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் 1.41 லட்சம் பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 85 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அஞ்சல் (தபால்) வாக்களிக்க தகுதியானவர்கள்.
அவர்களில் அஞ்சல் வாக்களிக்க 1.91 லட்சம் விண்ணப்பித்த நிலையில் இதுவரை 1.41 லட்சம் பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை வரை தபால் வாக்குகள் பெறுகின்ற பணி தொடரும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

