கழக வழக்குரைஞர் அணித் தலைவர், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் வீரமணி, பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் தலா 1000 ரூபாய் என, மொத்தம் 3,000 ரூபாய், விடுதலை வளர்ச்சி நிதியாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் வழக்குரைஞர் தோழர்கள். (சென்னை, 16.04.2026)

நெய்வேலி வெ.ஞானசேகரன் – மலர்விழி வாழ்விணையரின் 50ஆவது இணையேற்பு நாள் மற்றும் ஞானசேகரன் 79ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன், 9 முழு ஆண்டு விடுதலை சந்தாவும், 2 முழு ஆண்டு உண்மை சந்தாவும் வழங்கினர். மேலும், பெரியார் உலகத்திற்கு இரண்டாவது முறையாக நன்கொடையாக ரூ.10,000 காசோலையும் வழங்கினர். இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்
தே.செ.கோபால் உடன் இருந்தனர். (சென்னை, 15.04.2026).

