சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) ஒரு பகுதியான பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் போதிப்ரிட்ஜ் நிறுவனம் இணைந்து நடத்திய தொழில்வழிகாட்டுதல் (Career Counseling Certification Training) பயிற்சியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சு.பாக்கியலெட்சுமி, ஆங்கில முதுகலை ஆசிரியர் அ.அனிதா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கு.சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர். இப்பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற மதிப்பீட்டில் பள்ளி தலைமையாசிரியர் சு.பாக்கியலெட்சுமி பங்கேற்று ஏ தரச் சான்றிதழ் (Grade A) பெற்றுள்ளார்.
சான்றிதழை பெற்ற தலைமையாசிரியருக்குப் பள்ளி செயலர், ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
