இயக்கத்திற்கு இனி நன்கொடை அளிக்கப் போவதில்லை – க.ச.பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி

1 Min Read

ஆசிரியர் அவர்களின் 93ஆம்
பிறந்த நாளில் எடுத்த முடிவு இது
நாமென்ன நன்கொடை அளிப்பது?
இது எல்லாமே பெரியார் அளித்தது தானே?
எனவே, இனி ‘நன்றிக் காணிக்கை’ செலுத்துவோம்
என்ற நல்ல முடிவெடுத்தோம் – அதன்படி
நன்கொடை நிறுத்தப்படுகிறது.
நன்றிக்காணிக்கை தொடர்கிறது.
இனிவரும் காலங்களில், இயக்கத்திற்கு நாங்கள் வழங்கும் தொகையினை ‘நன்கொடை’ என்று குறிப்பிடாமல் ‘நன்றிக் காணிக்கை’ என்று குறிப்பிடுமாறு ஆசிரியர் அய்யா அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
நாங்கள் மான வாழ்வு வாழக் காரணமான எங்கள் குடும்பத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்து இம்மாதக் காணிக்கையை நன்றியுடன் செலுத்துகிறோம்.
நன்றியுடன்
க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி,
செ.பெ.தொண்டறம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *