இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.13- இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை இமயமலையில் கிழக்குச்சாரலில் இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மினெர்வர்யா பெண்டாலி

டில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த புதிய வகை “மினெர்வர்யா” தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னாள் துணை வேந்தரும், புகழ்பெற்ற தாவர மரபியல் வல்லுநருமான தீபக் பெண்டல் அவர்களின் நினைவாக இதற்கு “பெண்டாலி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவை மிகவும் சிறிய அளவிலான தவளைகள். இவை பெரும்பாலும் விளைநிலங்கள் மற்றும் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு அருகிலேயே காணப்படுகின்றன.

இந்த இனம் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.

ரகோர்ஃபரஸ் பிசுவாசி

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் மற்றொரு புதிய வகை மரத்தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வு மய்யத்தின் (ZSI) முன்னாள் இயக்குநர் விசுவாஸ் அவர்களின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை மரங்களில் வாழும் பழக்கம் கொண்டவை. இவற்றின் கால்களில் உள்ள ஒட்டும் தன்மை மரங்களில் எளிதாக ஏற உதவுகிறது.

வடகிழக்கு இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தை (Biodiversity) உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் தவளைகள் ஒரு பகுதியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் காட்டும் முக்கியக் குறிகாட்டிகளாகும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

புதிய இனங்களைக் கண்டறிவதன் மூலம், அந்தப் பகுதிகளில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்கான அவசியம் வலுப்பெறுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமயமலைத் தொடர்கள் இன்னும் பல அறியப்படாத உயிரினங்களின் புகலிடமாக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *