தஞ்சை, ஜன. 4– தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை மேனாள் உறுப்பினருமான மொழிப்போர் தளபதி எல்.கணேசன் (வயது 92) இன்று (4.01.2026) காலை 5.30 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இன்று (4.1.2026) காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் பாலாஜி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தளபதி எல். கணேசன் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது
மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் பாவலர் பொன்னரசு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத்தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ந.காமராசு, புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வெ.துரை, ஈ.பி. காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சோ.இராமகிருஷ்ணன், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், எடமேலையூர் திராவிடர் கழக செயலாளர் ந. லட்சுமணன், ஜெகதாராணி ஜெயக்குமார், கன்னைகிழக்கு இளைஞர் அணி த.தமிழரசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா.லெட்சுமணசாமி, அத்திவெட்டி வீரவேல் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மும்பையில் இருந்து எல்.ஜி அவர்களின் மூத்த மகன், திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா அவர்களிடம் தொலைபேசியில் பேசி ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்கள்
மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலம் நாளை (5.01.2026) காலை 9.00 மணி அளவில் அவரது இல்லமான தஞ்சாவூர் பாலாஜி நகரில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு ஒன்றியம் – கண்ணந்தங்குடி கீழையூரில் காலை 11 மணி அளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
