திராவிட இயக்கத்தின் சாதனை! பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் 42% ‘தி நியூஸ் மினிட்’ பார்வை!”

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் 42% உள்ளது என்று ‘தி நியூஸ் மினிட்’ வெளி யிட்டுள்ளது. இது திராவிட  இயக்கத்தின் சாதனையாகும்!

செய்தி விவரம் வருமாறு:

தமிழ்நாட்டுப் பெண்களின்
தொழில் பங்கேற்பு தேசிய அளவில் முன்னணியில்!

இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 14.9 லட்சம் பெண்களில், 6.3 லட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்; அதாவது 42 சதவிகிதம் – நாடு முழுவதும் தொழிற்சாலை வேலை செய்கிற பெண்களில் கிட்டத்தட்ட பாதி.

அரை நூற்றாண்டு
முதலீட்டின் பலன்

பெண்கள் முன்னேற்றத்தின் அடித்தளம்: இந்த சாதனை ஒரே இரவில் உருவானதல்ல; பெண்கள் கல்வி, நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சி, ஊரக மய்யமயப்படுத்தல் ஆகி யவற்றில் 50–60 ஆண்டுகளாக செய்யப்பட்ட நீண்ட கால முதலீட்டின் பலனாகும்.

உற்பத்தித் துறையின் முதுகெலும்பு; தொழிற்சாலைகளை தாங்கும் பெண்கள்!

எலக்ட்ரானிக்ஸ், காலணி, ஆடைத் தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகள் தமிழகத்தில் பெண்கள் பங்களிப்பில் இயங்குகின்றன. பல தொழிற்சாலைகளில் 80–85% வரை பெண்களே உற்பத்தி பணி யில் உள்ளனர். அவர்களின் ஒழுக்கம், பொறுப்புணர்வு, குறைந்த பணியிட மாற்றம் போன்றவை மாநிலத்தின் தொழிற்துறையை உலகளாவிய வளாகமாக மாற்றியுள்ளன.

கல்வி: பெண்கள் முன்னேற்றத்தை உருவாக்கிய அடித்தளம்

இதை சாத்தியமாக்கிய அடித்தளம் கல்வி. ஊட்டச்சத்து மதிய உணவு திட்டம், மிதிவண்டி போன்ற ஊக்க திட்டங்கள், பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் கொள்கைகள் —எல்லாம் சேர்ந்து இன்று உயர்கல்வியில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக சேரும் நிலையை உரு வாக்கியுள்ளன. வேலைக்குச் செல்கிற பெண்களுக்கான விடுதிகள் (Thozhiyar Viduthi), பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம் போன்ற திட்டங்கள், பெண்களின் சுயநினைவு மற்றும் நகர்வு வாய்ப்பை அதிகரித்துள்ளன.

முன்னேற்றத்தின் பின்னாலிருக்கும் மறைந்த முரண்பாடு

ஆனால் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு முரண்பாடும் உள்ளது. பெரும்பாலான பெண்கள் குறைந்த ஊதியம், கடின உழைப்பு, திறனற்ற பணிகளில் சிக்கியுள்ளனர்; குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசெம்ப்ளி போன்ற துறைகளில் அடர்த்தியாக உள்ளனர். வெள்ளை காலர் பணிகளில் பெண்கள் வெறும் 12% மட்டுமே. பாலின ஊதிய வேறுபாடு உள்ளது.

உயர்கல்வி பெற்ற இளம் பெண்களின் வேலைவாய்ப்பு சவால்

கல்வி பெற்ற இளம் பெண்கள்கூட—பட்டமேற்படிப்போடு, இன்ஜினியரிங் பட்டங்களோடு—குறைந்த ஊதிய தொழிற்சாலை வேலைகளை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது கல்வித் தரத்துக்கும், வேலை வாய்ப்பு தரத்துக்கும் இடையிலான பெரிய இடைவெளியை காட்டுகிறது.

எல்லா சிக்கல்களும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் பெண்கள் தொழில் பங்கேற்பு சமூக மாற்றத்தை ஆழமாக உருவாக்கியுள்ளது. தொழில் வாய்ப்புகள் குடும்பங்களை ஜாதி சார்ந்த தொழில்களில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. பெண்கள் ஒன்றி ணைந்து போராடும் யூனியன்கள் பாது காப்பு, மரியாதை, அடிப்படை வசதிகள் போன்ற வற்றில் முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளன.

தமிழ்நாடு, பெண்கள்
முன்னேற்ற மாடல்

பெண்கள் கல்வி, தொழில், நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ கொள்கைகளின் பல தசாப்த பயனாக உருவான ஒரு மாற்றம்தான் தமிழ்நாட்டு  கதை. சாதனைகளும் உள்ளன; இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளும் நிறைய உள்ளன. பெண்கள் அதிகார மய்யத்தின் இந்திய மாதிரியாகவும்—இன்னும் முடிக்கப்படாத பயணமாகவும்—தமிழ்நாடு் திகழ்கிறது என்பதாக ‘தி நியூஸ் மினிட்’ பூஜா பிரசன்னா வெளிப்படுத்தி உள்ளார்.

(தி நியூஸ் மினிட் பூஜா பிரசன்னாவின் காட்சிப் பதிவிலிருந்து தொகுக்கப்பட்டது)

– தொகுப்பு: குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *