இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஆசாராமுக்கு 6 மாத பிணையாம்!

1 Min Read

அகமதாபாத்/ஜோத்பூர், நவ.10 சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாராமுக்கு, அவரது மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, குஜராத் உயர்நீதி மன்றம் ஆறு மாத கால இடைக்காலப் பிணை வழங்கியுள்ளதாம்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, ஆட்கடத்தல் தொடர்பான இரண்டு வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வரும் ஆசாராம் பாபு (வயது 86), நீண்டகால மருத்துவ சிகிச்சைக்காகப் பிணை கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

பிணை கோரி மனு தாக்கல்

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறு  மற்றும் பல் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குச் சிகிச்சை பெறச் சிறையிலிருந்து வெளி வர அனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரது வயதையும், உடல்நலப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு, ஆசாராம் பாபுவுக்கு ஆறு மாதங்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் விரும்பும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், அதற்கான சூழலை உறுதி செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பிணை வழங்கப்பட்டு, சிறையிலிருந்து ஆசாராம் பாபு வெளிவந்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவியததாம்.

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர், உதய்ப்பூர் மற்றும் அகமதாபாத் போன்ற பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி, விளக்கேற்றியும், பட்டாசுகள் வெடித்தும், ஆடல்பாடல்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டா டினராம்.

‘‘தான் தவறு செய்யவில்லை என்றும்; கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்தேன்’’ என்று ஆசாராம் பாபு கூறியதையும் இங்கே நினைவூட்டுகிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *