புதுடில்லி, அக்.13 ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, புதுடில்லியில் 10.10.2025 நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை விலக்கியதால் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.
‘ஆண்கள் மட்டுமே’ கலந்துகொண்ட நிகழ்வு குறித்து பத்திரிகையாளர் அமைப்பு களும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இந்திய பெண் பத்திரிகையாளர் குழு ஆகியவை இதை கண்டித்தன.
கண்டனங்கள் வலுத்ததை தொடர்ந்து, முத்தாகியின் குழு இன்று அனைவரையும் உள்ளடக்கிய’ மற் றொரு ஊடக சந்திப் புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சர்ச்சை தொடர் பாக கருத்து தெரிவித்த ஒன்றிய அரசு, முந்தைய ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்வதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறி விலகிக்கொண்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினர். ராகுல் காந்தி, “பொதுவெளியில் பெண் களை புறக்கணிக்க அனுமதிப்பது, பெண்களுக்காக நிற்க நீங்கள் பலவீன மானவர் என்பதையே காட்டுகிறது” என்று விமர்சித்தார்.
2021-இல் ஆட்சிக்கு வந்த தலி பான்கள், பெண்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து பன்னாட்டு அள வில் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.